Monday , 24 March 2025
Home Cinema News அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ.25,000 கடன்…. ஜோதிகா யார் கூடவும் நடிக்க கூடாது – சூர்யா கறார்!
Cinema News

அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ.25,000 கடன்…. ஜோதிகா யார் கூடவும் நடிக்க கூடாது – சூர்யா கறார்!

surya

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது.

இந்த திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா அப்போது தனது சினிமா வாழ்க்கை குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார்.

அதில் நான் நடிக்க வந்ததே என்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய 25 ஆயிரம் கடனை அடைக்கத்தான்.

surya

நடிப்பதற்கு முன்பு பனியன் நிறுவனம் ஒன்றில் நான் 15 நாட்களுக்கு ரூபாய் 750 ஊதியத்துடன் பயிற்சி பெற்றேன்.

பிறகு எட்டாயிரம் நான் சம்பளம் பெற்றேன். அதுமட்டுமில்லாமல் பனியன் நிறுவனத்தில் பெற்ற அனுபவத்தின் மூலமாக என்னுடைய தந்தையின் முதலீட்டை பயன்படுத்தி சொந்தமாக நிறுவனம் தொடங்கலாம் என்ற திட்டத்திலிருந்தேன்.

நடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய கற்பனையில் கொஞ்சம் கூட இருந்ததே இல்லை. ஆனால், என்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் என்னுடைய அம்மா 25 ஆயிரம் கடனை வாங்கி இருந்தார்.

அதை எப்படியாவது அடைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தான் நான் நடிக்கவே வந்தேன். அப்படித்தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.

நாங்கள் ஒரு நடிகரின் மகனாக மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம். குறிப்பாக எங்களுடைய அக்கவுண்டில் ஒன்றரை கூட கிடையாது.

அப்பா பத்து மாதங்களாக வேலையில்லாமல் இருந்தார். அந்த நேரங்களில் ஒரு மகனாக எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது .

Also Read : அய்யய்யோ யம்மாடியோவ்…. ஓவர் வெயிட் போட்ட அமலா பால் – பார்த்ததும் பதறும் ரசிகர்கள்!

மணிரத்தினம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தொடர்பு அழைப்புகள் வந்தது. அதன் மூலம் எங்களுடைய அம்மாவின் கடனையும் அடைத்தேன்.

சினிமாவில் சூர்யா என்ற பெயரைப் பெற்று இன்று சூர்யாவாக உங்களது முன்பு நிற்கிறேன்.அதைப்போல் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த போது ஜோதிகா பூமிகா இருவரும் நடிக்கிறார்கள் என எனக்கு தெரிவித்தனர் .

surya jyothika2

இந்த படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று நான் முதலில் யோசித்தேன். ஆனால் ஜோதிகா நிச்சயம் நான் இந்த படத்தில் நடிப்பேன் என சொல்லிவிட்டார்.

அதனால் வேறு யாருடனும் ஜோதிகா நடிக்க கூடாது என்பதற்காக தான் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என சூர்யா நகைச்சுவையாக தெரிவித்தார். அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • ar murugadoss sikadar movie trailer reaction is bad among tamil audience தூக்கம் வருது முருகதாஸ் சார்! சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்கு இப்படியா ரெஸ்பான்ஸ் வரணும்?
  • Related Articles

    ar murugadoss sikadar movie trailer reaction is bad among tamil audience
    Cinema News

    தூக்கம் வருது முருகதாஸ் சார்! சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்கு இப்படியா ரெஸ்பான்ஸ் வரணும்?

    பாலிவுட்டில் தடம் பதித்த முருகதாஸ் கோலிவுட்டில் “தீனா”, “ரமணா”, “கஜினி”, “7 ஆம் அறிவு”, “துப்பாக்கி”,...

    actress sona heiden shared about the reason behind her addiction to alcohol
    Cinema News

    நான் குடிக்க ஆரம்பிச்சதே இந்த சம்பவத்தினாலதான்- பேட்டியில் குமுறிய நடிகை சோனா! ஒருத்தர் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டமா?

    கவர்ச்சி நடிகை தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று பெயர் பெற்றவர் சோனா. “பூவெல்லாம் உன்...

    dhool movie famous song used in veera dheera sooran movie
    Cinema News

    தூள் படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன பாடலை மீண்டும் கொண்டு வந்த வீர தீர சூரன் படக்குழுவினர்…

    சீயானின் அதிரடி திரைப்படம் சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்...

    good bad ugly premiere show cancelled
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி...