Friday , 21 March 2025
Home Cinema News ஷாலினி பிரசவத்தின் போது அஜித் செய்த செயல்…. இர்பானுக்கு மட்டும் தண்டனையா?
Cinema News

ஷாலினி பிரசவத்தின் போது அஜித் செய்த செயல்…. இர்பானுக்கு மட்டும் தண்டனையா?

ajith uirfan

சொந்தமாக YouTube சேனல் நடத்தி அதில் உலகம் முழுக்க உள்ள நாடுகளுக்கு சென்று விதவிதமான உணவுகளை ருசித்து சமைத்து வீடியோ வெளியிட்டதன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமாகி இருப்பவர் தான் இர்பான்.

இவர் Youtubeகளில் புட் ரிவியூ செய்ததன் மூலமாக கிடைத்த வரவேற்பை வைத்து மிகப்பெரிய அளவில் பிரபலமானதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

அதன் மூலம் மேலும் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் இர்ஃபான். இதனிடையே இர்பான் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

irfan

குறிப்பாக அவரது மனைவியின் பிரசவத்தின் போது. பிரசவத் அறையில் இருந்த இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடியை அவரே வெட்டி எடுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.

இது இந்திய மருத்துவ சட்டத்தின் படி மிகப்பெரிய தண்டனையாகும். ஒரு தனி நபர் உரிமையை மீறும் செயலான இதை பலரும் கண்டித்து இர்பானுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள்.

இது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் கூறி இருந்ததாவது இந்தமுறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் .

முன்னதாக இர்பான் தனது மனைவியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் கருவின் பாலினத்தை அறிந்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read : ஐயோ பாவம்! ரேவதிக்கு என்ன ஆச்சு? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!

விஷயம் இப்படி இருக்கும் போது இர்பானுக்கு மட்டும் தண்டனையா? அஜித்துக்கு மட்டும் பாராட்டா? என்ற ஒரு விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்து இருக்கிறது.

ஆம், தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர நடிகரான அஜித் தனது மனைவி ஷாலினியின் மூன்றாவது பிரசவத்தின் போது அவரது அருகிலேயே மருத்துவமனையில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதில் தனது மனைவியின் பிரசவ வலியை தன்னுடைய சின்ன ஹேண்டி கேமராவில் வீடியோ எடுத்திருக்கிறார்.

ajith

அதாவது பெண்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தால் தான் புரியும் என அஜித் அதை செய்ததாக அப்போது அவருக்கு பலரும் பாராட்டுகளை குவித்தார்கள்.

அதே செயல் இர்பான் இப்போது செய்திருப்பது எல்லை மீறிப் போய் உள்ளதாகவும் குழந்தை தொப்புள் கொடியை வெட்டும் அளவிற்கு அவருக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது என மருத்துவர்கள் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள். அஜித்துக்கு மட்டும் பாராட்டு? இர்பானுக்கு தண்டனையா என விவாதங்களை எழுப்பியிருக்கிறார்கள்.

  • good bad ugly premiere show cancelled குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!
  • Related Articles

    good bad ugly premiere show cancelled
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி...

    vani bhojan angry on press reporter
    Cinema News

    பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான வாணி போஜன்! அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பாங்க?

    சீரீயல் டூ சினிமா ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்...

    good bad ugly movie director reveals the ajith kumar character in movie
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்- ஓப்பனாக போட்டுடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை...

    sachein movie rerelease on april 18
    Cinema News

    சச்சின் படத்துக்கு போட்டியாக வந்த ரஜினி கமல் திரைப்படங்கள்! களைகட்டிய 2005 தமிழ் புத்தாண்டு! ஒரு Throwback…

    சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த...