Tuesday , 18 March 2025
Home Cinema News ஏய்… நான் அஜித்தை கல்யாணம் பண்ண போறேன் நீ கிளம்பு – மாதவனை எச்சரித்த ஷாலினி!
Cinema News

ஏய்… நான் அஜித்தை கல்யாணம் பண்ண போறேன் நீ கிளம்பு – மாதவனை எச்சரித்த ஷாலினி!

ajith madhavan

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தின் இடைப்பகுதியில் பல கோடிக்கணக்கான ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இருந்தவர் தான் நடிகை ஷாலினி .

இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

shalini

குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை துவங்கிய ஷாலினி மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் புகழ்பெற்றார் .

அதன் பிறகு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது. தமிழில் விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் மினி என்ற கேரக்டரில் நடித்து அறிமுகம் ஆனார்.

பிறகு அஜித்துடன் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு , அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்காத பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கிறார் .

madhavan

அவருடன் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது அவரை காதலித்து பெற்றோர்கள் சமத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இன்றுவரை ரசிகர்களின் எடுத்துக்காட்டான பேவரைட் ஜோடியாக அஜித் மற்றும் ஷாலினி பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

நடிகை ஷாலினி அஜித்தை காதலித்தபோது நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் தான் சோசியல் மீடியாக்களை தற்போது வைரலாகி வருகிறது .

Also Read : அந்த ஆசைக்காக திருமணம் செய்த கணவர் – புருஷனே வேண்டாம்னு வெறுத்து ஓடிய மனோரமா!

அஜித்தை காதலித்துக் கொண்டிருந்த போதுதான் ஷாலினி மாதவனுடன் அலைபாயுதே திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார் அப்போது மாதவனுடன் குறும்புத்தனமாக விளையாடி கேலி செய்தும் வருவாராம் .

அப்போது நான் அஜித்தை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அலைபாயுதே படம் நடிக்கும் போது என் கூட கிட்ட நெருங்கி வந்து எல்லாம் நடிக்காதீங்க .

shalini ajith

தூரத்தில் நின்னு ரொமான்டிக் சீன்ல நடிச்சிட்டு போங்க. அப்படின்னு பயங்கரமா டீஸ் பண்ணுவாராம். இதுபோல் ஷாலினி பலமுறை என்னிடம் சொன்னதாக மாதவனே கூறியிருக்கிறார்

அதேபோல் அதற்கு ஈடாக மாதவனும் ஷாலியிடம்.. நானும் சரிதாவை தான் காதலிக்கிறேன். அவரை தான் திருமணம் பண்ணிக்க போறேன்.

நீயும் என்னிடம் கிட்ட நெருங்கி வந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக் கொண்டாராம் .இப்படியாக அலைபாயுதே படத்தில் மிகச்சிறந்த நல்ல நண்பர்களாக அவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • aadhavan movie story wrote for vijayakanth விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!
  • Related Articles

    aadhavan movie story wrote for vijayakanth
    Cinema News

    விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!

    புரட்சி கலைஞர்  தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்...

    coolie movie digital business beat endhiran 2 business
    Cinema News

    2.0 சாதனையை ஓவர் டேக் செய்த கூலி? இவ்வளவு தொகைக்கு பிசினஸ் ஆகியிருக்கா? அடேங்கப்பா!

    ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட...

    shankar son arjith shankar introducing as a hero
    Cinema News

    ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்? அதுவும் இந்த இயக்குனரோட படத்துலயா? 

    பிரம்மாண்டம்னா ஷங்கர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கிற ஒரு பிரம்மாண்ட இயக்குனர்தான்...

    priya bhavani shankar has no chance in tamil cinema
    Cinema News

    பிரியா பவானி ஷங்கருக்கு தமிழில் வாய்ப்புகளே வரவில்லை- வருத்ததை பகிர்ந்த தயாரிப்பாளர்…

    ராசியில்லாத நடிகை தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் ஹீரோயினாக நுழைந்த பிரியா பவானி ஷங்கரை சமீப காலமாக...