Friday , 21 March 2025
Home Cinema News சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!
Cinema News

சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

nayanthara

நயன்தாரா ஆவணப்படம்:

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. இந்த வெப் தொடரில் நயன்தாரா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது முதல் அவர் எப்படி பல சர்ச்சைகளை தாண்டி மீண்டும் சினிமாவில் மீண்டும் வந்தார் என்பது வரை கூறுகிறது.

nayanthara

மேலும் விக்னேஷ் சிவனுடைய காதல் திருமணம் குறித்தும் அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியங்களை இந்த ஆவணப்படும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆவணப்படம் வெளியிடுவதில் பெரும் சர்ச்சை, தடங்கல் ஏற்பட்டதாகவும் தனுஷ் மீது நயன்தாரா பகிரங்கமாக புகார் கொடுத்திருந்தார்.

பிரபு குறித்து நயன்தாரா:

இந்த நிலையில் இந்த ஆவண பஃடத்தில் பிரபுதேவா குறித்தும் அவருடைய காதல் தோல்வியை குறித்தும் நயன்தாரா பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அதிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஸ்ரீ ராம ஜெயம் படத்தில் கடைசி சாட் எடுக்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. எனக்கே தெரியாமல் அப்போது நான் அழுதேன். எனக்கு சினிமா தான் எல்லாமே அப்படிப்பட்ட சினிமாவிலிருந்து விலக முடிவு செய்தது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

ஆனால் நான் திரைத்துறையில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் அந்த ஒரு நபர்தான் என்னை சினிமாவில் விலக சொன்னதும் அவர்தான். எனக்கு அதில் விருப்பமில்லை எனக்கு வேற ஆப்ஷனும் அவர் கொடுக்கவே இல்லை. ஒரே வார்த்தையில் இனி சினிமாவில் வேலை செய்யக்கூடாது என அந்த நபர் கூறிவிட்டார்.

சினிமாவில் விலக காரணம்:

nayanthara

அந்த நபர் மீது இருந்த காதல் நம்பிக்கையால் நான் அவருக்கு வேறு வழியில்லாமல் அதை ஒப்புக்கொண்டேன். வாழ்க்கை என்ன என்பதை புரிந்து கொள்ள அப்போது எனக்கு தெளிவும் இல்லை நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள நாம் ஒரு வேதனையான சூழலில் இருக்க வேண்டும்.

நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தான் இப்படி வெளிப்படையாக பேசியிருக்கிறார் என ரசிகர்கள் இந்த வெப் தொடர் மீதான அதிக ஆர்வத்தை செலுத்தி பார்க்க துவங்கியிருக்கிறார்கள். இருந்தாலும் நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் சினிமா பற்றி பேசும் முதல் பாதி மட்டும் தான் சிறப்பாக இருக்கிறது. காதல் தோல்வி கல்யாணம் உள்ளிட்டவை பார்ப்பதற்கு மிகவும் கிரிஞ் ஆக இருக்கிறது. இரண்டாவது பாதி வேஸ்ட் என ரசிகர்கள் கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது

  • vani bhojan angry on press reporter பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான வாணி போஜன்! அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பாங்க?
  • Related Articles

    vani bhojan angry on press reporter
    Cinema News

    பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான வாணி போஜன்! அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பாங்க?

    சீரீயல் டூ சினிமா ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்...

    good bad ugly movie director reveals the ajith kumar character in movie
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்- ஓப்பனாக போட்டுடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை...

    sachein movie rerelease on april 18
    Cinema News

    சச்சின் படத்துக்கு போட்டியாக வந்த ரஜினி கமல் திரைப்படங்கள்! களைகட்டிய 2005 தமிழ் புத்தாண்டு! ஒரு Throwback…

    சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த...

    shihan hussaini signed for donate his body parts
    Cinema News

    உடலை தானம் செய்ய கையெழுத்து போட்ட ஹூசைனி! ஆனால் அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

    அதிரடி சமையல் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கராத்தே மாஸ்டராக வலம் வந்தவர் ஷிஹான் ஹூசைனி. இவரின்...