Wednesday , 26 March 2025
Home Cinema News நாக சைதன்யா ஒரு விஷமி….? நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க தவறிட்டேன் – சமந்தா பளீச்!
Cinema News

நாக சைதன்யா ஒரு விஷமி….? நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க தவறிட்டேன் – சமந்தா பளீச்!

samantha

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான சமந்தா முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு ரவி வர்மன் உடைய மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கை தொடங்கினார்.

அதை எடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்து முதல் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ் படத்தின் ரீமேக் தான் தெலுங்கில் எடுக்கப்பட்டது.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சிறந்து அறிமுக நடிகைக்கான ஃபிலிம் விருதும் அந்த திரைப்படத்திற்காக கொடுக்கப்பட்டது.

samantha

தொடர்ந்து சமந்தா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனிடையே தமிழில் நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, தங்கமகன், சூப்பர் டீலக்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல், நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இதனிடையே தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோவாக இருந்து வந்த நாக சைத்தன்யாவை கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்த சமந்தா 2017 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

Also Read : இது எனக்கு 2ம் கல்யாணம்…. ஒரு பொண்ணு இருக்கா – ஷாரிக் மனைவி பகீர் பேட்டி!

ஆனால், இந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டது. மிகுந்த மன உறுதியுடன் விவாகரத்து. வலிகளைத் தாண்டி மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியில் சிட்டாடல் என்ற தொடரில் சமந்தா நடித்து வருகிறார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த வெப் தொடரின் ப்ரோமோஷனில் சமந்தா ஈடுபட்டு வருகிறார். அப்போது அவரிடம் நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஸ்பையாக இருந்திருக்கிறீர்களா? என கேள்வி கேட்டதற்கு சமந்தா நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருந்திருக்க வேண்டியது அவசியம்.

samantha

அப்படி இல்லாதது மிகப்பெரிய தவறு… ஸ்பையாக இல்லாததால் தான் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என கூறினார்.

சமந்தாவின் இந்த பதில் அவரது முன்னாள் காதலரான நாக தன்யா உடனான பிரிவை வைத்து தான் மறைமுகமாக இப்படி கூறி இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

காரணம் நடிகை நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

விரைவில் இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தன்னுடைய காதல் கணவர் வேறொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்வதை தான் சமந்தா மனம் பொறுக்காமல் இப்படி பேசுகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும், நாக சைதன்யா உண்மையிலே ஒரு விஷமி கேரக்டர் தான். அதனால் தான் இவ்வளவு அழகான இவ்வளவு நல்ல குணம் உள்ள பெண்ணை அவர் விட்டுவிட்டு வேறொரு பெண்ணை தேடி சென்றிருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

  • veera dheera sooran part 3 movie lead in part 2 பார்ட் 3 படத்துக்கு Lead வைத்த இயக்குனர்? அப்போ பார்ட் 1? வீர தீர சூரன் இயக்குனரின் வித்தியாசமான முயற்சி!
  • Related Articles

    veera dheera sooran part 3 movie lead in part 2
    Cinema News

    பார்ட் 3 படத்துக்கு Lead வைத்த இயக்குனர்? அப்போ பார்ட் 1? வீர தீர சூரன் இயக்குனரின் வித்தியாசமான முயற்சி!

    முதலில் வரும் பார்ட் 2 சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் வருகிற 27...

    Jananayagan and Parasakthi movie release on pongal
    Cinema News

    விஜய் துப்பாக்கியை வைத்து விஜய்யையே குறிபார்க்கும் சிவகார்த்திகேயன்? பொங்கலுக்கு தரமான போட்டி இருக்கு போல?

    ஜனநாயகன் பொங்கல் விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” 2026 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு...

    trisha telugu movie achieved that lot of times telecasted in television
    Cinema News

    அதிக முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சாதனை படைத்த திரிஷா திரைப்படம்… அதுவும் இத்தன வாட்டியா?

    கும்கியை மறக்க முடியுமா? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் விஜய் தொலைக்காட்சியில் “கும்கி”,  “துப்பாக்கி” போன்ற திரைப்படங்கள்...

    pradeep ranganathan fourth film announcement
    Cinema News

    பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் அறிவிப்பு! படத்தோட டைரக்டர் இப்படிப்பட்டவரா? வேற லெவல்…

    வளர்ந்து வரும் நடிகர் கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக பிரதீப் ரங்கநாதன் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில்...