Monday , 24 March 2025
Home Cinema News ஆர்த்தி மீது அது ரொம்ப அதிகமா ஆகிடுச்சு – மனைவி குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
Cinema News

ஆர்த்தி மீது அது ரொம்ப அதிகமா ஆகிடுச்சு – மனைவி குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!

sivakarthikeyan dp

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் சினிமா பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்திருந்தாலும் தொடர்ந்து தன் திறமையாலும் தன் முயற்சியாலும் இன்று டாப் ஹீரோ என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

ஆரம்பத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்து சிவகார்த்திகேயன் இடையே சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது.

இதனிடையே அவர் சினிமா வாழ்க்கையை தொடரக்கூடாது என்பதற்காக சில பெரிய தலைகளே அவருக்கு பெரும் குடைச்சல் கொடுத்து அவரது படங்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தார்கள்.

அந்த கஷ்டங்களை எல்லாம் மீறி தற்போது வெளிவந்து திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன் .

இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது .

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சிவகார்த்திகேயன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தை குறித்து பேசி இருந்தார்.

அதிலும் அவர் மனைவி குறித்து பேசி இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை பிறந்த பின்பு தான் என்னுடைய மனைவி ஆர்த்தி மீது எனக்கு அதிகமான மரியாதை ஏற்பட்டிருக்கிறது .

ஏனென்றால் என்னுடைய மூத்த மகள் ஆராதனா மதுரையில் பிறந்தார். நான் விமானம் பிடித்து அங்கு செல்வதற்குள் அவள் பிறந்து விட்டாள்.

ஆனால் தற்போது மூன்றாவது குழந்தை பிறப்பை நான் அருகில் இருந்து பார்த்தேன். மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை பிறந்த பின்பு தான் என்னுடைய மனைவி ஆர்த்தி மீது எனக்கு அதிகமான மரியாதை ஏற்பட்டிருக்கிறது .

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவ வலி என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.

எனவே என்னுடைய மனைவியின் மீது எனக்கு அலாதி மரியாதையும் அன்பும் வந்துள்ளது. அம்மாவை ஏன் நாம் தெய்வத்திற்கு இணையாக பேசுகிறோம் என்பது எனக்கு தெரிய வந்தது இப்போதுதான்.

தன்னுடைய அம்மா மீது மிகுந்த பாசம் உள்ள நிலையில் அவர் தன்னை பெற்றெடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பதையும் சிவகார்த்திகேயன் அந்த அப்போது நினைவுபடுத்தி பேசியிருந்தார்.

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...