Monday , 24 March 2025
Home Cinema News நான் ஜெயிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட நண்பன், இப்போ என் கூட இல்லை- வருத்தத்தில் சந்தானம்…. நட்புனா இப்படில இருக்கணும்!
Cinema News

நான் ஜெயிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்ட நண்பன், இப்போ என் கூட இல்லை- வருத்தத்தில் சந்தானம்…. நட்புனா இப்படில இருக்கணும்!

santhanam talks about his friend who was the main reason for his success

விஜய் டிவி To சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சந்தானம். “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் நடித்துகொண்டிருந்தபோதே இவருக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. அதன் பின் “மன்மதன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் சந்தானம்.

santhanam talks about his friend who was the main reason for his success

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கவுண்ட்டர் வசனங்களில் கலக்கிய சந்தானம், தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடியனாக உருவானார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் தற்போது சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். 

என் ஆருயிர் நண்பன்…

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை பேட்டியில் சந்தானம் தனது ஆருயிர் நண்பனை குறித்த ஒரு நெகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். “சினிமா உலகத்திற்கு வந்து பிரபலமான பின்பு எல்லோருக்கும் பல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் அப்படி நான் புகழடைவதற்கு முன்பே எனது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்தவன்தான் எனது நண்பன் ஜிலானி. 

santhanam talks about his friend who was the main reason for his success

அவன் ஒரு பணக்கார வீட்டு பையன். அவனோடு ஒப்பிட்டால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் எப்போதுமே அவனுடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பான். அந்த சமயத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்ததால் பல கல்லூரி விழாக்களிலே என்னை அழைப்பார்கள். அது போன்ற கல்லூரி விழாக்களில் பல நடிகர்கள் ஆடம்பர காரில் வந்து இறங்குவார்கள். அந்த விழாக்களுக்கு ஆட்டோ ரிக்சாவில் போவதற்கு கூட என்னிடம் காசு இருக்காது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட தன்னுடைய விலை உயர்ந்த காரில் என்னை ஏற்றி அந்த விழாக்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த டிரைவரிடம் விழா முடியும் வரை இருந்து இவனை அழைத்துக்கொண்டு வா என்று சொல்லி அனுப்புவான் ஜிலானி. 

என்னுடைய முன்னேற்றத்தில் அவனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நண்பனை இப்போது இழந்துவிட்டேன் என்று நினைக்கும்போதுதான் என் மனதுக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது” என கூறியிருக்கிறார். இந்த தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். 

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...