Monday , 24 March 2025
Home Cinema News 25 வருஷமாகியும் குறையாத காதல்…. சூர்யாவுக்கு இவ்வளவு பொசசீவ்வா?
Cinema News

25 வருஷமாகியும் குறையாத காதல்…. சூர்யாவுக்கு இவ்வளவு பொசசீவ்வா?

surya

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் 1999 ஆம் ஆண்டு நடித்ததன் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் நட்பாக மாறியது.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கி பல வருடங்களுக்குப் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

surya jyothika2

இவர்களுக்கு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஜோதிகா திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தார் .

இதனிடையே பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடத்து வருகிறார் .

அதேபோல் சூர்யா தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகர் அந்தஸ்தை பிடித்திருக்கிறார். தற்போது இவர்கள் குழுவமாக மும்பையில் சென்று செட்டில் ஆகி இருக்கிறார்கள் .

அங்கே சூர்யா ஹிந்தி படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். தற்போது சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கிறார் .

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது .

Aslo Read : விஜய் சொன்ன “விசில் அடிச்சான் குஞ்சுக்கு” என்ன அர்த்தம் தெரியுமா?

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஜோதிகா குறித்தும் அவருடன் நடித்த அனுபவத்தை குறித்தும் காதலை குறித்தும் பகிர்ந்து கொண்டார் .

அப்போது ஜில்லுனு ஒரு காதல் படத்தின் கதை முதலில் தேடி வந்த போது நான் இந்த படத்தின் நடிக்க யோசித்து கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஜோதிகா எனக்கு இந்த படத்தின் கதை ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. நான் இந்த படத்தில் நடிப்பது உறுதி… உனக்கு விருப்பம் இருந்தால் நடி இல்லையென்றால் பரவாயில்லை என சொல்லிவிட்டார்.

surya jyothika2

இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. அந்த படத்தில் ஜோதிகாவுடன் இன்னொரு நடிகர் நடிப்பதை பார்க்க எனக்கு விருப்பமே இல்லை .

எனவே நானும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். சில்லுனு ஒரு காதல் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது என கூறினார் சூர்யா.

சூர்யாவுக்கு ஜோதிகா மீது இவ்வளவு பொசசிவா அழகான காதல் கேட்கவே அருமையாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகளாகி விட்டாலும் இன்று வரை அதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...